வாலிபருக்கு கத்திக்குத்து: ரவுடிக்கு 'காப்பு'




சேலம்; சேலம், ஜான்சன்பேட்டை, கிழக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40. பெயின்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது அண்ணனிடம் ஒருவர் தகராறு செய்துள்ளார்

. இதனால் தகராறை விலக்கி விட, மோகன்ராஜ் முயன்றார். அங்கிருந்த நபர், கத்தியால் மோகன்-ராஜை குத்தியுள்ளார். இதில் அவரது கண் அருகே காயம் ஏற்பட, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அஸ்தம்பட்டி போலீசார் விசா-ரித்ததில், அஸ்தம்பட்டி, ஹவுசிங் போர்டை சேர்ந்த ரவுடி சுகேல், 21, கத்தியால் குத்தியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement