நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை

மோகனுார்:மோகனுார் அருகே வீடு புகுந்து, 4 பவுன், 1 லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.


மோகனுார் அடுத்த ஒருவந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், லாரி டிரைவர். இவரது மனைவி நித்தியா, 44, கடந்த மே 31ம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நான்கு பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனதை தெரியவந்தது. மோகனுார் போலீசில் நித்தியா கொடுத்த புகார்படி, எஸ்.ஐ.,செல்வம் விசாரித்து வருகிறார்.

Advertisement