சிக்கய்ய அரசு கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்

ஈரோடு:ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.காம், வணிக நிர்வாகவியல் (பி.பி.ஏ.,) என, 11 இளநிலை பாடங்களுக்கு சேர்க்கை துவங்கி உள்ளது.

இன்று (5), நாளை (6) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 8ம் தேதி முதல் பொது கலந்தாய்வும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடக்கவுள்ளதாக, கல்லுாரி முதல்வர் திருக்குமரன் தெரிவித்துள்ளார்.

Advertisement