அதிக வெப்ப அபாயத்தில் 14 இந்திய நகரங்கள்: ஆக்ஸ்போர்டு ஆய்வில் அதிர்ச்சி
புதுடில்லி: உலகளவில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் முதல் 50 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 14 நகரங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு நகரங்களும் இடம்பிடித்துள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உலகளவில் குறிப்பிடத்தக்க வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் முதல் 50 நகரங்களில் இந்தியாவின் 14 நகரங்களை அடையாளம் கண்டுள்ளது. அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன.
உலகளவில் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நகரமாக ஈராக்கின் அல் பஸ்ரா அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகப்படியான வெப்பநிலை பாதிப்பு, மக்கள்தொகை பாதிப்புத்தன்மை மற்றும் குறைந்த அளவிலான சமாளிக்கும் திறன் கொண்ட அதிக ஆபத்துள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.
உலகளாவிய முதல் 50 நகரங்களின் பட்டியலில் ஆமதாபாத், நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கோல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை மற்றும் சென்னை ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஆமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதல் 10 நகரங்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன. அதேபோல, முக்கிய சுற்றுலாத் தலமாக இருக்கக்கூடிய ஜெய்ப்பூர், வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.
டெலிபோன் சர்வே என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக அதிகபட்ச வெப்பம் பதிவாகும் இடங்கள் வேலூர் மற்றும் திருத்தணி என்பது தமிழ்நாட்டில் பிறந்த எவருக்கும் தெரியும். ஆங்கிலேய மோகம் இன்னும் எத்தனை தலைமுறைக்கு எடுத்து செல்லப்படும் என்பது தெரியவில்லை.
சிறிதுகூட மூளையை உபயோகிக்காமல் - மரங்களை வெட்டித்தள்ளுகிறான் மனிதன்.
இப்போது இயற்கையின் சீற்றம் - வெப்பமாக மாறி மனிதனை சுட்டெரிக்கிறது.
RAIN WATER CONSERVATION க்காக உபயோகப்பட்ட கிணறுகளை மூடிவிட்டு - BORING போட்டு தண்ணீரை உறிஞ்சி நிலத்தடியில் பாலைவன்களை உருவாகிவிட்டான் மனிதன்.
உடனடி நடவடிக்கைகள் தேவை - இல்லாவிட்டால் நம் பொன்விளையும் விளைநிலங்கள் பாறாங்கல்லாகவும் , பாலைவனமாகவும் மாறி உணவு பிரச்சனை நம்மை துரத்தும்.
1. AFFORESTATION - என்ற கல்வியை பாடத்திட்டங்களில் புகுத்தி 6 ம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை எல்லா மாணவ மாணவிகளை யம் FIELD WORK செய்யவைத்து - 5 வருதங்களுக்குள் FOREST COVER - ஒவ்வொரு ராஜ்யத்திலும் 80% மேல் ஆக்கவேண்டும்.
2, RAIN WATER CONSERVATION மற்றும் கிணறுகளை கட்டாயமாக்கி GROUND WATER TABLE ஐ அதிகரிக்கவேண்டும்
தத்திகள் எங்கள் தெருவில் இருந்த பெரிய பெரிய வேப்ப மரங்களை தாங்க வாங்குன காரை நிறுத்த வெட்டிட்டாங்க. பரம வைஷ்ணவாள் வாழும் இடமாக்கும். எல்லார் வீட்டிலும் ஏ. சி ஓடுது. நாடு சூடாகாம என்ன குளிருமா? பெருமாள் இவிங்களை மன்னிப்பாரா? இவிங்க ளே இப்பிடின்னா சனாதன விரோதிகள் எப்பிடி பாத்துக்கோங்க
திரு.சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்த நேரம் அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். மண்ணையும், மரத்தையும், நீரையும், காற்றையும், மலையையும் காப்பாற்ற அவர் அரியணையில் அமர வேண்டும்.மேலும்
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
-
ஓமன் எண்ணெய் கிடங்கு அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்;கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம்