பவானிசாகர் அணை கரையில் குட்டியுடன் திரிந்த யானைகள்

பவானிசாகர்:பவானிசாகர் வனப்பகுதியில் போதிய மழையின்றி வெயில் கொளுத்துவதால், மரம், செடி, கொடி காய்ந்துள்ளது. வனப்பகுதி நீர்நிலை, குட்டைகளில் வறண்டு விட்டன.

இதனால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள், தண்ணீரை தேடி அலைய தொடங்கியுள்ளன.பவானிசாகர் அணையை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம், பகல் நேரங்களில் குட்டிகளுடன், அணை மேல் பகுதியை கடந்து தண்ணீர் குடிக்க செல்கின்றன.
இந்த கூட்டத்தில் இருந்து குட்டியுடன் வெளியேறிய இரண்டு யானைகள், பவானிசாகர் அணை மேல் பகுதியில் நேற்று நடமாடியது. இதனால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பீதி அடைந்தனர். யானைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement