தர்மபுரி மாவட்ட 249 பஞ்.,ல் இன்று கிராம சபை கூட்டம்

தர்மபுரி; தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்-துக்களில் இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடப்பது குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள-தாவது:


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 249 கிராம பஞ்.,களில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜூன், 1 முதல், 5 வரை நடக்கும் சுத்தமான மற்றும் பசுமையான கிராமம் தொடர்புடைய நிகழ்வுகள், நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்-துதல் தொடர்பாக விவாதிக்கும் பொருட்டு, இன்று, (ஜூன், 5) காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ளது. அனைத்து கிராம பஞ்.,களிலும் சிறப்பு கிராம சபை கூட்-டங்கள் நடப்பதை கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் மற்றும் பஞ்., அளவிலான பற்-றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement