தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்

தர்மபுரி; தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அரூர் தரணீதர், பாலக்கோடு ராஜேஷ் கண்ணா, தர்மபுரி மாவட்ட பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத் ஆகியோர், தர்மபுரி மாவட்ட சுற்றுப்பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்-போது, இண்டூர் பகுதியில், தனியார் பள்ளி வாகனம் ஒன்று தகுதிச்சான்று இல்லாமலும், அரசு விதிகளை மீறியும், பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய-டுத்து, அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்-தனர்.
அதே போல், அரூர் பகுதியில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் இல்லாததால், 3 தனியார் பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement