பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை; சொல்கிறார் ரஷ்ய அதிபர் புடின்
நமது நிருபர்
இந்தியா- அமெரிக்கா உறவுகள் ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்காது; பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேறு எந்த நாட்டுடனும் இந்தியா கொண்டுள்ள இருதரப்பு உறவுகளால் எந்தவிதமான பாதகமான விளைவுகள் ரஷ்யாவுக்கு ஏற்படவில்லை. இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளி. இந்தியா உலகின் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, தற்போது வலுவான பொருளாதார வளர்ச்சியையும் கண்டு வருகிறது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து கணிசமாக விரிவடையும். இருதரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலரை எட்டும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்தியா- அமெரிக்கா உறவுகள் ரஷ்யாவுடனான உறவுகளை பாதிக்காது. பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதில் பலனில்லை. இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ உறவுகளில் எங்களுக்கு எந்தப் பிரச்னைகளும் இல்லை.
மேம்பட்ட ஆயுதங்கள் சார்ந்த விஷயங்களில் நாங்கள் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அவர்கள் தரை மற்றும் கடல் தளங்களில் இருந்து ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர். Su-57 போர் விமானத்தைப் பொறுத்தவரை, இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் எங்கள் இந்திய நண்பர்களுக்கு முன்மொழிந்தோம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இதில் எந்தப் பிரச்னைகளும் இல்லை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவையே முதல் நான்கு இடங்களில் உள்ள நாடுகளாகும். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும், எல்லைப் பிரச்னைகள் உட்பட, இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முயன்று வருகின்றனர். இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.
அடடா! தமிழ் நாட்டிலேயே இத்தனை வெளியுறவுக் கொள்கை மேதாவிகள் இருக்கிறார்களே!
ஒரு குடும்பம் பதவி ஏற்பதற்காக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை நீலம் பாய்ந்த உடலோடு இந்திய அனுப்பி வைத்தவர்கள் ருசிய உளவு துறை. எப்படியோ, ருசியாவுடன் காலம் கடந்த நமக்கு உறவு உள்ளது. நமக்கு அவர்களின் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது.
ஆனால் நாம் இப்போது ருசியாவை மட்டும் தேர்ந்து எடுக்காமல், எங்கு சிறப்பான ஆயுதங்கள் கிடைக்கிறதோ அந்த நாடுகளுக்கு செல்கிறோம். அதற்கு முக்கிய காரணம் ராணுவ ஆயுதங்கள் வாங்குவதில் உள்ள கமிஷன் ஏஜெண்டுகளை ஒழித்தது தான். ஒரு குடும்பத்தால் பல குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் ராணுவ ஆயுதங்கள் கொள்முதலில் பயன் பெற்றது வரலாறு .
அந்த தரமற்ற ஒரு குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று சில தரமற்ற போர்கப்பல்களையும் நம் தலையில் கட்டினார்கள் என்பது மறைக்கப்பட்ட வரலாறு ...
நீர் முழுகி கப்பல் S400 என்று பழைய தளவாடங்களை இந்தியா தலையில் கட்டுவதில் புதின் சமர்த்தர்
ரொம்ப அழுத்தினா தாங்காது...
இங்கு ஒரு செவிடன் இருக்கிறான். உங்களின் இந்த கருத்தை ஏஸ் 400 குழாய் வழியாக அவன் காதுகளில் போய்சேரும்படி ஒன்றை ஏவி விடுங்கள்.
உங்களுக்கு புரியுது. ட்ரும்பு புரிஞ்சுக்க மாட்டேன்னு நாட்டாமை பண்ராறே .
ரஷ்யா இந்தியா நட்புறவு சோதனையான காலகட்டத்தில் கூட தோளோடு தோள் நின்ற நட்பு ..அதே போலத்தான் இந்தியாவும் இஸ்ரேலின் நட்ப்புறவும் .... துரோகியான துருக்கிக்காரன் இப்போ அலறிக்கிட்டு இந்தியாவோட நட்ப்பை வலுப்படுத்தனம்ன்னு நினைக்கிறதே நாம் வெளியுற கொள்கையில் எந்த அளவிற்கு வலுவாக உள்ளோம் என்பதை காட்டுகிறது ..இருந்தாலும் அவனுங்களுடன் எச்சரிக்கையாக இருப்பது தான் நமது எழுதப்படாத கொள்கை ...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இரு நாட்டு அதிபர் புட்டினுக்கும் பிரதமர் மோடிக்குமான உறவு தனித்துவமானது, உற்ற, நம்பத்தகுந்த நண்பர்கள், அவசரத்துக்கு கரம் கோர்த்து உதவ தயருள்ள நாடுகள். இதில் எவர் தலையீடும் எதுவும் செய்யமுடியாது.
ஆனால் இங்குள்ள அறிவீலிகளுக்கு இது புரியாது. அவர்களுக்கு நாடு முக்கியம் இல்லை. அரசியல் செய்து பதவிதான் முக்கியம். மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.மேலும்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!
-
தினமும் 2 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை
-
அறம், பொருள், இன்பம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு செயல் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு