தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி

4

- நமது நிருபர் -

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம், வரும் 18ம் தேதி, சென்னையில் வெகு வி மரிசையாக நடக்கவுள்ளது. அதன்பின், அவர் கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து, விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் வரும் உள்ளாட்சி தேர்தலில், முதல்வர் விஜயுடன் இணக்கமாக பேசி, தகுதி அடிப்படையில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு பெற வேண்டும் என டில்லி மேலிடம் விரும்புகிறது.

அதற்காக காங்கிரஸ் மேலிடம் தயார் செய்துள்ள மாநில தலைவருக்கான பட்டியலில், கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரும், எம்.பி.,யுமான மாணிக்கம் தாகூர், தரவு பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், அவர்கள் இருவருக்கும் இடையே, மாநில தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

Advertisement