தேர்தலுக்கு முன்பே ம.தி.மு.க., பேசியிருக்கலாம்

@quote@ சென்னை தலைமை செயலகம், ஒரு அரசியல் கட்சியின் செயலகம் போல உள்ளது. தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இல்லை.
கட்சி பதிவு குறித்த, நீதிமன்ற வழக்கில், சொந்த சின்னத்தில் நிற்பதாக நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் தனி சின்னத்திலேயே, இனி வரும் தேர்தல்களை நாங்கள் சந்திப்போம்.

தனி சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், முதன்மை செயலர் துரை வைகோவும் பேசுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் தேர்தலுக்கு முன் இதுபற்றி பேசியிருக்கலாம்.

சீர்காழி தொகுதியில், தனி சின்னத்தில் நிற்பதாக வைகோ அறிவித்தார். பிறகு, ஏன் அந்த முடிவை மாற்றினார் என்பதும் தெரியவில்லை.

- ஜவாஹிருல்லா



தலைவர், மனிதநேய மக்கள் கட்சிquote

Advertisement