விஜயுடன் துரை வைகோ சந்திப்பு

1

சென்னை: ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, சென்னையில் நேற்று முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்.

தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால், ம.தி.மு.க.,வால், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சரவையில் இடம் பெற முடியவில்லை.

'தனி சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிடாதது தவறு' என, துரை வைகோ கூறி வந்தார். இது தி.மு.க., தலைமையிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில், முதல்வர் விஜய் வீட்டிற்கு, நேற்று மாலை துரை வைகோ சென்று, விஜயை சந்தித்தார்.

அப்போது, திருச்சியை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தார். 'இது மிக நல்ல சந்திப்பாக இருந்தது' என, துரை வைகோ தெரிவித்தார்.

Advertisement