உணவகத்தில் திருடியவர் ஆந்திராவில் கைது

காரமடை: காரமடை – கன்னார்பாளையம் சாலையில், மூன்று நாட்களுக்கு முன், சிறிய உணவகம் ஒன்றில், மர்ம நபர் ஒருவர், இரவில் கடையின் பூட்டை உடைத்து, ரூ.40 ஆயிரம் கொள்ளையடித்து சென்றார். காரமடை போலீசாரின் விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் சிங், 28, என்பதும், இப்பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆந்திராவில் தலைமறைவாகியிருந்த இவரை, காரமடை இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர்.----

Advertisement