தவறுகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
கோவை: ''தவறுகளை சுட்டி காட் டினால், நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: தென்மேற்கு பருவமழையால் தமிழகத்துக்கு பாதிப்பு அதிகம் இல்லை; அச்சுறுத்தலும் இல்லை. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுக்கு ஒவ்வொரு துறையிலும் எப்படி செயல்பட வேண் டும், மக்கள் எதிர்பார்ப்பு என்ன... செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு, தவறுகள் நடப்பதை மீடியாக்கள் சுட்டிக் காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். தமிழக சட்டம் ஒழுங்கு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. காவிரி நீரை பொருத்தவரை மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என முதல்வர், பிரதமரை வலியுறுத்தியுள்ளார். எங்கள் கூட்டணியில் திறந்த மனதோடு இருக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள வருவாய்த்துறையை தான் முதலில் களையெடுத்து சீர்திருத்த வேண்டும்.....
அதே திராவிடப்பாணி. சுட்டிக்காட்டவில்லை என்றால் வேலை செய்யமாட்டோம். திராவிட பாசறையில் கற்றதன் படி ஊழல் மட்டும் செய்து கொண்டே இருப்போம்.
ஐயா, தளபதி ஆட்சியில் எங்களுக்கு குறை ஒன்றும் இல்லை, நிறை தான். புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு தளபதி விஜய் அவர்கள் தன் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும். மே 9ம் தேதி, பதவி ஏற்பு தினத்தன்று 22 லட்சம் யூனிட் இருந்த காற்றாலை மின் உற்பத்தியை, வெறும் 4 வாரங்களில், ஜூன் 5ம் தேதி 713 லட்சம் யூனிட் ஆக உயர்த்தியுள்ளார் நம் முதல்வரும், அவரது வழி காட்டுதலின் படி மின்சார துறை அமைச்சரும், மின்சார துறை அதிகாரிகளும். வாழ்த்துக்கள். இந்த நற்பணி தொடர வேண்டும்.
வேற புதுசா என்ன சொல்ல முடியும். தவறுகள் எல்லாம் உங்கள் ஆட்சியில் சுட்டிக்காட்ட வேண்டுமா.. அப்புறம் நீங்க எதற்கு? நீங்க போகிற ரோட்டுல எத்தனை ஓட்டை ,அதை சுட்டிக்காட்ட யார் வேண்டும்..மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
-
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!