அண்ணாமலையுடன் இணைந்த பா.ஜ. நிர்வாகிகள்

திருப்பூர்: பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி தனி இயக்கம் துவங்கியுள்ளார்.

கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் கணியாம்பூண்டி செந்தில், பா.ஜ.வில் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்து நேற்று விலகி, அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவராக பொறுப்பு வகித்துவந்த பாலசுப்பிரமணி, நேற்று பா.ஜ., விலிருந்து விலகி, தனதுஆதரவாளர்களுடன்அண்ணாமலை துவக்கியுள்ள இயக்கத்தில் இணைந்தார்.

Advertisement