தங்கைக்கு தொல்லை அண்ணனுக்கு 'போக்சோ'

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்த, 6 வயது சிறுமி, பெரியம்மா வீட்டில் வளர்ந்துள்ளார். இவரது தந்தை, திருப்பூரில் லாரி டிரைவராக உள்ளார். தாய், மில் தொழிலாளி.

பெரியம்மா மகனான, 17 வயது வாலிபர், மே, 31ம் தேதி, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

ஜூன், 1ல் சிறுமியை அவரது தாய் மீட்டார். நேற்று முன்தினம், சிறுமியின் பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டதால், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கும்பகோணம் மகளிர் போலீசில், சிறுமியின் தாய் அளித்த புகாரில், 'போக்சோ' வழக்கு பதிந்த போலீசார், சிறுமியின் பெரியம்மா மகனை கைது செய்தனர்.

Advertisement