பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம் 

- நமது நிருபர்-

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் பதவியில் இருந்து ஏ.ஜி.சம்பத், ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை துவக்கியுள்ள புதிய இயக்கத்தில் இணைந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஏ.ஜி.சம்பத். பா.ஜ., மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், கடந்த சட்டசபை தேர்தலில், திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

கட்சியில் 'சீட்' கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து, அவர், கட்சியின் மாநில தலைவருக்கு ஜூன் 5ல் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், தமிழக பா.ஜ., துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் ஜூன்6 ல் அண்ணாமலையை சந்தித்து, அவரது புதிய இயக்கத்தில் இணைந்தார்.

Advertisement