லஞ்சம் பெற்ற சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் ராமநாதன், 59. இவர், வெளிப்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், சார் - பதிவாளராக பணிபுரிந்தார்.

பத்திரப்பதிவுக்காக ஒருவரிடம், 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், மே, 21ல் கைதானார்.

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில், போலி ஆவணங்கள் வாயிலாக, ராமநாதன் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, துறை சார்ந்த நடவடிக்கையாக, அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement