திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
நமது நிருபர்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும்; மாற்றப்படாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறிதாயவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரொம்ப தெளிவாக சொல்லியாச்சு, மக்கள் வந்து அமைதியை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும்; மாற்றப்படாது.
இதனை மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதில் யாரும் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவீதம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
செய்தியாளர்களை சந்தித்துதான்...
முதல்வர் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: செய்தியாளர்கள் யாரையும் பார்த்து பயப்படவில்லை; திமுகவை பார்த்து கூட முதல்வர் ஒரு நிமிடம் கூட பயப்படவில்லை; இது எல்லாம் யாருக்கும் பெரிய விஷயமே கிடையாது. செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix பண்ணாதீங்க.
7, 8 ஆண்டுகளாக சிலர் அவர்களது சொந்த விளம்பரத்திற்காக அவர்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? பிரிண்ட் மீடியாதான் இருந்தது. அறிக்கை மட்டும் வழங்கப்படும். செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை.
எப்போது தேவையோ அப்போது முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்.தொடர்ச்சியாக மக்களை சந்திக்கிறார். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். மக்களுக்குத் தேவையானதை அவர் தெளிவுபடுத்துவார். அரசு சார்பாக, கட்சி சார்பாக நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திருப்பரங்குன்றம் தீபம்: விஜய் அரசு நிலைப்பாடு இதான்; அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (66)
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
06 ஜூன்,2026 - 16:27 Report Abuse
ஆலேலூயா கும்பல் இப்போது மட்டும் ஏன் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
06 ஜூன்,2026 - 16:13 Report Abuse
உங்களுக்கும் திருப்பரங்குன்றம் முருகன் ஆப்பு வைக்க வேறு ஒருவன் ரூபத்தில் கிளம்பிவிட்டார். அடுத்த தேர்தலில் தெரியும். பொறுத்திருக்கவும். 0
0
Reply
sankaran - hyderabad,இந்தியா
06 ஜூன்,2026 - 16:07 Report Abuse
அப்போ கோர்ட் தீர்ப்பு?.. 0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
06 ஜூன்,2026 - 15:41 Report Abuse
ஆட்சி ஆணவத்தில் ஆடுங்கடா திமுக அதிமுக கூட்டணி கட்சிகளின் அயோக்கியர்களை கொண்ட ஆளும் அரசு சீக்கிரமாக அழியும் 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
06 ஜூன்,2026 - 15:32 Report Abuse
மொத்தத்தில் 3 சிறுபான்மையினரின் வாழ்விற்காக அப்பாவி ஹிந்துக்கள் 10 பேர் வரை பலியிடுவதற்கு பெயர்தான் மதச்சார்பற்ற அரசு.. இதுதான் கடந்த ஆட்சியில் நடந்தது..அதனால்தான் முருகனின் வேல் அசைக்க முடியாத திமுகவை அசைத்து விட்டது.. அடுத்து நீங்கள்தான்.. தயாராக இருங்கள்.. இப்போது யோசிப்பார்கள் மதம் பார்க்காமல் ஓட்டளித்த ஹிந்துக்கள்.. இயூமுலீ, விசிக கூட்டணிக்கு வந்த போதே தெரியும்,இப்படி நடக்கும் என்று. முருகன் இருக்கிறார்.. உணர்ந்து கொள்வீர்கள்.. 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
06 ஜூன்,2026 - 15:26 Report Abuse
Old wine in a new bottle. No sooner or later, the people will realise their mistake. 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
06 ஜூன்,2026 - 15:13 Report Abuse
போன ஆட்சி இஸ்லாமியர்கள் ஆட்சி. இப்போது கிறிஸ்துவ ஆட்சி நடைபெறுகிறது. அப்படிதான் இருக்கும். 0
0
Reply
தேவதாஸ் புனே - ,
06 ஜூன்,2026 - 15:11 Report Abuse
திமுக - 2 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
06 ஜூன்,2026 - 15:03 Report Abuse
உங்கள் அரசியல் விளையாட்டு வேண்டாம் ... 0
0
Reply
SIVA - chennai,இந்தியா
06 ஜூன்,2026 - 15:01 Report Abuse
துஷ்ட சக்தி ஆதாரம் பதினொன்று , இந்த விஷயத்தில் தேர்தல் அரசியல் மூலம் தான் தீர்வு கிடைக்கும் ,
மற்ற முயற்சிகள் வெட்டி வேலை .... 0
0
Reply
மேலும் 56 கருத்துக்கள்...
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்
Advertisement
Advertisement