புனித அந்தோணியார் பெருவிழா துவக்கம்

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று 70 அடி உயர கொடி மரத்தில் புனித அந்தோணியாரின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

வரும் 14 ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை என, இரு வேளைகளில் கூட்டுத்திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடக்கிறது.

முக்கிய திருவிழாவாக ஆடம்பர தேர்பவனி வரும் 13ம் தேதி நடக்கிறது.

Advertisement