பட்டுக்கூடு ஏலம்

தர்மபுரி; தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். நேற்று, 32 விவசாயிகள் ஏலத்-திற்கு வந்தனர். 59 குவியல்களாக, 2,040 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.

இவை, 500 முதல், 825 ரூபாய் வரை சராசரியாக, 500 ரூபாய் என ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 13.75 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 20,640 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது

Advertisement