ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினவிழா நடந்தது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வத் தொண்டரான பாரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் பங்கேற்ற மாணவர்கள் “இன்றே இயற்கையைப் பேணு வோம்; நாளைய உலகை வளப்படுத்துவோம்” என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், வடக்குத்து பள்ளி செயலாளர் சிந்து, முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், பள்ளியின் சி.பி .எஸ்.இ பள்ளி முதல்வர் சிதம்பரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரியா, நிர்வாக அலுவலர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement