சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்
வாழப்பாடி:வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை, கலச பூஜை செய்து தேருக்கு கண் திறப்பு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், சுவாமி அலங்காரத்துடன் ஊர்வலம், அன்னதானம் நடந்தன.
நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், நல்லதம்பி கவுண்டர் தெரு, வைத்திய படையாட்சி தெரு வழியே சென்று மீண்டும் மாலை, 6:30 மணிக்கு கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. வழியில் ஏராளமான பக்தர்கள், சுவாமிக்கு அவல், கடலை, வெல்லம் உள்ளிட்டவை மூலம் படையல் வைத்தனர். இன்று சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.
மேலும்
-
ஆரோக்கியம் என்பது வெறும் உணவல்ல அது வாழ்வியல்!
-
மாநகராட்சியில் 'லாபி' அலுவலர்களின் விசுவாசிகள் சுத்தி சுத்தி வர்றாங்க: பணியிட மாற்ற உத்தரவிலும் மறைமுக 'அரசியலா'
-
குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே நடத்த அரசு உத்தரவு
-
பெண்கள், குழந்தை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: புதிய போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் பேட்டி
-
ஏ.ஐ., வரவால் தமிழிலேயே ஏற்றுமதி செய்யலாம்: சேதுராமன் சாத்தப்பன் தகவல்
-
உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் ரூ.50 க்கும் கிடைக்கவில்லை