சஹாரா பாலைவனத்தில் லாரி சிக்கியது; தண்ணீர் தாகத்தில் 50 பேர் பலியான சோகம்
நியாமி: நைஜரில் உள்ள சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதானதால், அதில் பயணித்த, 50 பயணியர், குடிக்க தண்ணீர் இல்லாமல், தாகத்தில் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், அண்டை நாடான மாலியில் உள்ள டெல்ஹாண்டெக் என்ற நகரில் நடந்த ஓர் ஆன்மிக விழாவில் பங்கேற்று விட்டு, லாரியில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அந்த லாரி, வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றதுடன், சஹாரா பாலைவனத்திற்குட்பட்ட வெகு தொலைவில் அமைந்துள்ள, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பழுதாகி நின்றது.
இதையடுத்து, அனைவரும் பல நாட்களாக அந்த லாரியை பழுது நீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், அதை அவர்களால் சரி செய்ய முடியவில்லை. கடும் வெப்பம் நிலவும் பாலைவனத்தில் மாட்டிக்கொண்ட அவர்கள் அனைவரிடமும் இருந்த தண்ணீர் முழுதும் தீர்ந்து போனதாக கூறப்படுகிறது. சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி நின்ற பகுதியை சுற்றிலும் பல கி.மீ., துாரத்துக்கு நிழலோ அல்லது நீர் நிலைகளோ இல்லை.
லாரியை பழுது பார்க்கவும் முடியவில்லை. மேலும், தனிமைப்பட்ட பகுதி என்பதால், தங்களை காப்பாற்ற யாரும் வராத நிலையில், அந்த பயணியர் வெயிலை தவிர்ப்பதற்காக லாரிக்கு அடியிலும், அதை சுற்றிலும் நிழலைத் தேடி அமர்ந்திருந்தனர்.
இறுதியில், ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், தாகம் தாளாமல் அவர்கள் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் இருவர் மட்டும் நீர் நிலைகளை தேடி, அங்கிருந்து 50 கி.மீ., நடந்து சென்று, அருகிலிருந்த ஒரு நகரத்தை அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் பார்த்த போது லாரியில் பயணித்த பயணியர் பலியானது தெரியவந்தது.
So sad
ஓம் சாந்தி மிகவும் வருத்தமான செய்தி. அவர்கள் அனைவரின் ஆன்மாவும் சாந்தி அடையட்டும்.
ஓம் சாந்தி. இத்தனை உயிர்கள் பலியான செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அதிக சுமை தாங்கும் ட்ரோன்கள், ஜிபிஎஸ் டிராக்கர்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்கள் உள்ள இந்த நவீன தொழில்நுட்ப உலகில், மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்திலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் தவிக்கும் தன் குடிமக்களை மீட்க ஒரு நாட்டினால் முடியாதா? இந்த ஏழை ஆப்பிரிக்க நாடுகள், கண்மூடித்தனமாக ஆயுதங்களுக்காகச் செலவு செய்வதை விடுத்து, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக அதிகம் செலவிட வேண்டும்.
பாலைவன நீதி என்று ஒரு கருத்து உண்டு. பாலைவன கொள்ளையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சமூகங்களில் மனிதாபிமானம் கொஞ்சமும் கிடையாது. ஏன் என்றால் அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் வாழ்வதற்காக அவர்கள் யாரை வேண்டுமானால் கொல்லலாம் என்பதே.
அங்கு இருந்து இங்கே படையெடுத்த சமூகங்களில் அந்த எண்ணம் இன்னும் மேலோங்கி இருப்பதை நாம் இன்றும் காணலாம். அதுவே நமது தமிழக கலாச்சாரத்தை மிகவும் பாதித்து உள்ளது. இன்னும் மிக மோசமாக பாதிக்கும்.
இழவு வீட்டில் மத வெறுப்பை உமிழும் ஜென்மங்களை எப்படியும் திருத்த முடியாது பாலைவனம் இயற்கை தந்தது மேலும் சகாரா பாலைவனம் இருக்கும் இடமான இங்கே பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்திற்க்கும் உங்க கருத்து பொருந்துகிறதல்லவா...
பரிதாபமான நிகழ்வு. ஒரு வாழ்க்கை பாடத்தை இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம். பிரச்சனை என்று வந்தவுடன் அதிலேயே முடங்கி விடாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயல்படுத்தியதால் இந்த இருவர் உயிர் தப்பியது. நமக்கு வரும் இடர்களிலேயே சிக்கித் தவிக்காமல் அடுத்து செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருந்தால் சிக்கல்கள் முருகன் அருளால் தானாகவே விலகி விடும்.
பயணங்களை நன்கு திட்டமிட வேண்டும்.... சிக்கலான பாதையில் பயணிக்கும்போது இது போன்ற கனரக வாகனங்கள் மனித பயணத்திற்கு ஏற்றதல்ல.,. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்....
மிகவும் துயரமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த லாரியில் குறைந்த பட்சம் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஒரு மிதி சைக்கிள் கொண்டு போயிருக்கலாம். மேலும் வானளாவிய சர்வேயிலன்ஸ் செய்திருக்கலாம், அவர்களை காப்பாற்றியிருக்கலாம்.
நீர் இன்றி அமையாது உலகு !
ஆன்மீக நிகழ்ச்சிக்கு சென்று வந்த அப்பாவிகளை இறைவன் இப்படி ஒரு தண்டனை கொடுத்துள்ளது நியாயமா.
லாரியில் ஐம்பது பேருக்கு மேல் பயணிக்க முடியுமா ?மேலும்
-
ரூ.2 கோடி ரொக்கம், 5 வீடுகள், 13 மனைகள்: அரசு பொறியாளர் வீட்டு ரெய்டில் சிக்கின
-
புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா? 20 ஆண்டுகளாக அரசு நிதி பாழாகும் அவலம்
-
காட்சி பொருளாக மாறிய குழந்தைகள் மையம்
-
அப்துல்கலாம் நினைவிடத்தை 2 கோடி சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
-
மாணவர்கள் கல்விக்கு உதவி; எம்.எல்.ஏ.,
-
வைகை அணைக்கு இரைதேடி பறவைகள் வருகை அதிகரிப்பு