விநாயகர் கோவில் பூசாரி மீது புகார்
திரு.வி.க.: விநாயகர் கோவில் பூசாரி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திரு.வி.க., நகர், வெற்றி நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 66. இவர், அதே பகுதியில் உள்ள, வினைதீர்த்த விநாயகர் கோவிலின் தலைவராக உள்ளார்.
கடந்த மே மாதம் கோவிலில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக, கோவிலின் 19.33 கிராம் தங்க நகை மற்றும் 554 கிராம் வெள்ளி பொருட்களை, கோவில் பூசாரி பூர்ணபிரகாஷ் குட்டி என்பவரிடம் கொடுத்துள்ளார்.
கோவில் நிகழ்ச்சிகள் முடிந்தும், நகைகளை திருப்பி தராமல் பூசாரி பூர்ணபிரகாஷ் குட்டி அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, சுந்தர்ராஜன் திரு.வி.க., நகர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement