நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு

27

நமது சிறப்பு நிருபர்



நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில் சன் டிவி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1996ம் ஆண்டு நக்கீரன் கோபால், சந்தன கடத்தல் வீரப்பனைச் சந்தித்து எடுத்த பேட்டி எடுத்தார். அந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில், நடிகை சுகன்யா குறித்து அவதூறான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, 1996ல் நடிகை சுகன்யா, சன் டிவி மற்றும் நக்கீரன் கோபால் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

2015ல் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் விசாரணையின் போது, ​​சன் டிவி நெட்வொர்க், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று வாதிட்டது. வீரப்பனுடன் தான் நடத்திய நேர்காணலை ஒளிபரப்புவதற்காக, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்தான் தங்களை அணுகியதாக அந்த சேனல் கூறியது.



அதற்கு நக்கீரன் கோபால், ''ஒளிபரப்பு ஒப்பந்தத்தின்படி, நேர்காணலின் எந்தப் பகுதியையும் திருத்தி அமைக்கும் உரிமை சன் டிவிக்கு உண்டு. நான் அந்த தொலைக்காட்சிக்கு 9 மணி நேர வீடியோவை கொடுத்தேன். அதில் நான்கு மணி நேர வீடியோ மட்டுமே ஒளிபரப்பப்பட்டது'' என விளக்கம் அளித்தார்.
விசாரணை முடிவில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், நடிகைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
ஒளிபரப்புக்கு முன்பாக தவறான தகவல்களைத் திருத்தவோ, நீக்கவோ முழுஉரிமையும் சேனலுக்கு இருந்தும் அவர்கள் அதைச் செய்யத் தவறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும் நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் சன் டிவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சன் டிவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.

ஒளிபரப்புக்கு முன் அந்த அவதூறான பகுதியை எடிட் செய்து நீக்கும் அதிகாரம் சன் டிவிக்கு இருந்தும், அதைச் சரிபார்க்காமல் வெளியிட்டது தவறு என்று கூறிய நீதிபதி, சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.



@block_P@

நீதிபதி கேள்வி!

வருத்தம் தெரிவித்து அறிவிப்பு சன் டிவியில் வெளியிடாமல் இன்னொரு பத்திரிகையில் வெளியாகி உள்ளது குறித்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்பது பற்றியும் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அத்தகைய வருத்தம் அந்த சேனல் ஒளிபரப்பில் வெளியிடப்பட்டிருந்தால், அது முன்னர் வெளியிட்ட செய்தியைப் பார்த்த அதே பார்வையாளரையே சென்றடைந்திருக்கும். இன்னொரு பத்திரிகையில் வருத்தம் தெரிவித்து இருப்பது உள்நோக்கத்தைக் காட்டுகிறது,” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.block_P

Advertisement