அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
புதுக்கோட்டை: ''மாற்றத்தை விரும்பிய தமிழக மக்கள், அ.தி.மு.க., -- தி.மு.க.,விற்கு மாற்று என்று நினைத்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தலில் அ.ம.மு.க., சார்பில் வென்ற எம்.எல்.ஏ.,வை காரில் வைத்து கையெழுத்து வாங்கி, அவர் த.வெ.க.,வை ஆதரிப்பதாக கூறி, கவர்னரிடம் கொடுத்தனர்.
அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரிடம், குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பது போல ஆசை வார்த்தை கூறி, ஆதரவை பெற்று கொண்டு, தற்போது அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட் டார் முதல்வர் விஜய்.
மாற்றத்தை விரும்பிய தமிழக மக்கள், அ.தி.மு.க., -- தி.மு.க.,விற்கு மாற்று என்று நினைத்து, த.வெ.க., என்ற ஒரு பேராபத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
த.வெ.க., அரசு அறிவித்துள்ள இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன; இது ஏமாற்று வேலை.
போதைப்பொருள் கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட, கடந்த ஆட்சியில் நடந்தவை, அதைவிட இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்கும் வழியை த.வெ.க., அரசு பார்க்க வேண்டும். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பித்தலாட்ட வேலைகளை செய்யக்கூடாது.
த.வெ.க.,வினர் தேர்தலுக்கு முன்பு 'ரீல்ஸ்' போட்டார்கள். தற்போது ரியாலிட்டிக்கு வந்த பிறகும், 'ரீல்ஸ்' எடுபடாது. முதல்வர் விஜய் இன்னமும் தேர்தல் நேரத்தில் பேசியது போல 'டயலாக்' பேச வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதுகெலும்பே இல்லாமல் பணத்திற்கும் பதவிக்கும் மயஙகியவாறு மண் புழுவை போல் வளையும் இந்த மக்கள் பிரதிநிதி கூட்டத்தால் உஙகள் கட்சிக்குத்தான் என்ன பலன், எடப்பாடிக்குதான் என்ன பலன்? நடு தெருவில் நிற்கட்டும் விடுஙகள்.
நடிகர் திலகம் விஜய்க்கு டயாலாக் பேசுவதை ஐடா வேறொன்றும் தெரியாது . டயலாக்குகாகதான் இவருக்கு இவரின் ரசிகர்கள் வாக்களித்தார்கள்.
இடைத் தேர்தலிலாவது நாட்டு நலனை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். நிறம் மாற்றும் பச்சோந்திகளுக்கு பழம் பெருச்சாளிகளுக்கு மாய உலகமான சினிமா துறையினருக்கு வாக்களிக்காதிருக்க வேண்டும். சொந்த குடும்பத்தை ஏமாற்றியவர்கள் ஏன் பொது மக்களை நாட்டை ஏமாற்ற மாட்டார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். முறையாக வரி கட்டுகிறார்களா என்று பார்க்க வேண்டும். வாழ்க பாரத்
இதை தவிர வேறு எதை எதிர்பார்த தீர்?
அதிமுக MLA யாரும் காசில்லாத ஓட்டாண்டி இல்லை ஐம்பது தலை முறை சொத்து சேர்த்து வைத்திருக்காங்க ஆகவே நடுத்தெருவில் நிக்க வேண்டிய அவசியமும் இல்லை நீ ஒன்றும் கவலைப் பட வேண்டாம்
கொள்ளையடிப்பதற்காகவே கட்சி நடத்திவிட்டு இன்றைக்கு அது கலைந்து கானல் நீராகி வருவதால் பினாத்தி வருகிறார். சசியும் அவர் குடும்பத்திடமும் இருந்து ஜெயாவை காட்டின் சம்பாரித்த பல லட்சம் கோடிகளை பறிமுதல் செய்தாலே தமிழகத்தின் கடனை அடைத்து விடலாம். விஜய் ஆட்சியை நன்றாகத்தான் நடத்தி வருகிறார். தினகரன் தமிழக அரசியலிலிருந்து ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஜந்து.