சர்வாதிகாரி ஹிட்லரால் உத்வேகம் பெற்றேன்; தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்கும் படைக்கு சர்வாதிகாரி ஹிட்லரின் பெயர் வைத்ததற்கு, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக, சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதற்கு, 'ஹைட்ரா' என, முதல்வர் ரேவந்த் ரெட்டி பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'ஹைட்ரா என்பது சர்வாதிகாரி ஹிட்லருக்கு விருப்பமான வார்த்தை. பிறரை கொலை செய்யும் அவருக்கு நெருக்கமான குழு ஹைட்ரா என அழைக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து உத்வேகம் பெற்றே, நீர்நிலைகளை பாதுகாக்கும் படைக்கு அப்பெயரை வைத்தேன்' என, தெரிவித்திருந்தார். இதற்கு தெலுங்கானாவின் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டி தன் சமூக வலைதள பக்கத்தில், 'ஹிட்லரின் அபாயகரமான மற்றும் அவசர கால மனநிலையை ரேவந்த் ரெட்டி வெளிப்படுத்தி உள்ளார்.
இதன் வாயிலாக, தன் கட்சித் தலைவர் ராகுலின் கருத்தை அவர் எதிரொலிக்கிறார். இந்த கருத்துக்கு அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். எமர்ஜென்சி காலம் முதல் மக்களின் குரலை காங்கிரஸ் ஒடுக்கி வந்துள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி தன் பதிவில், 'ஏழைகளின் வீடுகளை இடித்த ரேவந்த் ரெட்டி, ஹிட்லரைப் போல ஒரு சர்வாதிகாரி' என, விமர்சித்துள்ளது.
அப்போ பாதியிலேயே தற்கொலை தான் சொல்லுங்க ...
பெண் ஹிட்லர் இந்திராவின் கட்சிக்காரர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள்? ஜனநாயகத்துக்கும் காங்கிரசுக்கும் வெகுதூரம்.
ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற அரசியல் சட்டம் மட்டும் போதாது சர்வாதிகார குணம் வேண்டும் என்கிறார்.மதவாத சர்வாதிகார கும்பலுக்கு வெஞ்சாமரம் வீசும் கும்பல் இவருக்கெதிராக போர்க்கொடி தூக்குவது ஏன் ?
சர்வாதிகார மோடிக்கெதிராக வலுக்காத கண்டனங்களா எழுந்துவிட்டது?
மோடி சர்வாதிகாரி இல்லை
அறிவு இல்லாதல் வரும் எண்ணங்கள்
மோடி என்ன சர்வாதிகாரம் செயது விட்டார்.
சர்வாதிகார கும்பலை எதிர்கோள்ள ஹிட்லரை தவிர வேறு யாரும் இல்லை என்கிறார்?. இதில் என்ன தவறு.
இங்கே ஒரு இரும்புக்கை சர்வாதிகாரி படுதோல்வி அடைந்து தினமும் அழுது அரற்றி கொண்டு உள்ளார், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்
நம்மூர் தலைவர் ரஷ்ய கொடுங்கோலர் ஸ்தாலின் பேரை தமது மகனுக்கு சூட்டி அகமகிழ்ந்து போனாரே அதை விடவா.மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?