எலங்காளப்பட்டியில் எருது விடும் விழா

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலங்காளப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் அக் கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்-றன.

முன்னதாக, கிராம வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின், ஊர்கவுண்டரின் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து, சீறி பாய்ந்த காளை-களை ஏராளமான இளைஞர் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர்.

Advertisement