'இந்தியா 8% வளர்ச்சியை பெறும்'
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சங்களை தாண்டி, நாடு 8 சதவீத வளர்ச்சியை அடையும் என, உலக வங்கியின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் நீல்காந்த் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் குறித்து நிலவும் கருத்துகள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவையாக உள்ளன.
இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் நிறுவனங்களாகவும் இருப்பதால், டீசலின் சுத்திகரிப்பு லாப விகிதம் அதிகரிக்கும்போது நிறுவனங்கள் பலன் அடைகின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான சூழல் உள்நாட்டில் நிலவுகிறது. கார் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குறியீடுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறனில் இந்தியா வலுவான நிலையில் இருப்பதால், எண்ணெய் விலை உயர்வின் பாதிப்பை ஓரளவு குறைக்க முடிகிறது.
எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 -- 8 சதவீதம் அல்லது அதற்கும் மேலும் இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?