நிர்வாகிகள் தேர்வு

செஞ்சி: செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செஞ்சி பார் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

வழக்கறிஞர்கள் தேவகுமார், அரிகிருஷ்ணன், சுப்ரமணி முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், தலைவராக முன்னாள் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், செயலாளராக அன்புசெல்வன், பொருளாளராக பாபு, துணைத் தலைவராக மஞ்சுளா தணிகாசலம், துணைச் செயலாளர்களாக மோகனப்பிரியா, அருண்குமார், நூலகராக சின்னதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement