தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி ஒண்டி முனியப்பன் நகர் மக்கள் மனு

நாமக்கல்; ஒண்டி முனியப்பன் நகருக்கு தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி, அப்பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்-கோடு, நாகர்பாளையம், ஒண்டி முனியப்பன் நகரில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றோம். அவ்வாறு வசிக்கும் எங்களது வீடுக-ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் வெகுநாட்களாக குடிநீர் வர-வில்லை. மேலும், தெருவில் அமைக்கப்பட்-டுள்ள பொது குடிநீர் குழாயில், இரண்டு வாரங்க-ளுக்கு ஒருமுறை, அதுவும் சிறிதுநேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அதனால், முதியோர், குழந்தைகள், நோயாளிகள் வைத்துள்ள நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றோம். எனவே, ஒண்டி முனியப்பன் நகருக்கு தடையில்லா குடிநீர் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement