பயணியர் கூட சரிவு பாதை மாற்றி அமைக்க கோரிக்கை

திருப்புத்துார்,ஜூன் 10-

திருப்புத்துாரிலிருந்து கண்டவராயன்பட்டி செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் கூடத்தில் சரிவான நடைபாதை ரோடு வரை அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்லும் போது விபத்திற்கான வாய்ப்புள்ளது.

திருப்புத்துார் -பொன்னமராவதி செல்லும் இந்த ரோட்டில் டி.எஸ்.பி.அலுவலகம் அருகில் இந்த பயணியர் கூடம் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பயணியர் கூடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.இது ரோட்டிற்கு இணையாக ஓரமாக ஏறி,இறங்க வசதியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரோட்டில் வாகனங்கள் செல்லும் பகுதியில் இறங்கும் படியாக இந்த பாதை  அமைக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Advertisement