விளையாட்டு தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் சென்னை சவுமியாவுக்கு ‘வெள்ளி’

சென்னை: சண்டிகரில் நடந்து வரும் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீராங்கனை சவுமியா வெள்ளி பதக்கம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்திய ஜூடோ சங்கம் சார்பில், ஆசிய கேடட் ஜூடோ போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி, பஞ்சாப் தலைநகர், சண்டிகரில் நடந்து வருகிறது.

பல மாநிலங்களைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனையர் பங்கேற்று, பல்வேறு எடை பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மகளிர், 40 கிலோ பிரிவில், சென்னை சார்பில் களமிறங்கிய, 17 வயதான சவுமியா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி போட்டி வரை முன்னேறினார்.

தொடர்ந்து, தன் திறமையின் மூலம் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த தேசிய போட்டியில், தமிழக அணி வென்றுள்ள முதல் பதக்கம் இது.

Advertisement