நாளை 3 மாவட்டம், ஜூன் 12ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1

சென்னை: திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 12ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement