மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு; பக்தர்களோடு வரிசையில் நின்று தரிசனம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களோடு வரிசையில் நின்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவில் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ரமேஷ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலின் நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவர் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக நடந்து வரும் திருப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் எல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்பதை இன்று ஆய்வு செய்தேன்.


வாசகர் கருத்து (14)
spr - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 07:09 Report Abuse
பழனி மலையில் யானையடிப் பாதை பலராலும் பயன்படுத்தப்படும் வழித்தடம் ஆனால் அங்கே ஏறும் வழி சீராக இல்லை பல இடங்களில் சரிவாக இருப்பதுடன் பக்கவாட்டில் கைப்பிடிக்க எதுவாக கைப்பிடிக்க கம்பிகளும் இல்லை சில இடங்களில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருக்கிறது வருமானம் கொட்டும் இக்கோயிலில் இந்த சிறு செலவைச் செய்ய அரசு கவனிக்குமா 0
0
Reply
V.NAGARAJAN - ,இந்தியா
11 ஜூன்,2026 - 22:32 Report Abuse
HONOURABLE HIND RELIGIOUS DEPT MINISTER, VANAKKAM. NEAR VIRUTHACHALAM IN KOLANCHIAPPER TEMLE DEPT PERSONS COLLECTED MONEY FROM DEVOTEES FOR VARIOUS ACTIVITIES. BUT THEY DO NOT GIVE ANY RECEIPT ALSO. PLEASE GO AND CHECK AND CORRECT IT. IF IT WILL RECTIFY MOST OF THE DEVOTEES PEACEFULLY PRAY THAT GOD MURUGA. ALSO IN THAT TEMPLE CAMPUS NO NEATNESS . THANK YOU 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
11 ஜூன்,2026 - 17:48 Report Abuse
பக்தர்களோடு பக்தராக, அமைச்சர் வரிசையில் நிற்பது, பக்தர்களது சிரமங்களை அறியவும், அதை எப்படி சரி செய்யலாம் என்பதை தீர்மானிக்கவும் நிச்சயம் உதவும். பாராட்டுக்கள். 0
0
Reply
V S Venkataramani - ,இந்தியா
11 ஜூன்,2026 - 17:01 Report Abuse
எல்லாவற்றையும் சீர் செய்ய எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு அருள் புரியட்டும். 0
0
Reply
Ram pollachi - ,
11 ஜூன்,2026 - 16:47 Report Abuse
ஆன்மீக அன்பர்கள் வழங்கும் பொருட்களை வைத்து தான் தினப்படி கோவில் கைங்கர்யம் நடைபெறுகிறது இ.ச.அ.துறை ஒரு ரூபாய் கூட செலவு செய்வது கிடையாது.... கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்த ராஜாக்கள், மன்னர்கள் பெயரில் கல்வெட்டு கிடையாது.... ஆனால் சுண்ணாம்பு அடித்து படம் காட்டும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கல்வெட்டு அவசியம் இருக்கும்..... அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்..... 0
0
Reply
berlin - manama,இந்தியா
11 ஜூன்,2026 - 16:44 Report Abuse
Super 0
0
Reply
Ram pollachi - ,
11 ஜூன்,2026 - 16:39 Report Abuse
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முள்வேலி அமைக்கப்பட்டது.... அருகில் வசிக்கும் ஒரு தரப்பு மக்களுக்கு இடையூராக இருப்பதாக ஆட்சியரிடம் புகார் தரப்பட்டது..... உடனடியாக முள்வேலி அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது என்பது பத்திரிகை செய்தி..... ஆக சர்வ அதிகாரம் மக்கள் பிரதிநிதிக்கா? அல்லது அரசு அதிகாரிகளுக்கா? 0
0
Reply
Nachiar - toronto,இந்தியா
11 ஜூன்,2026 - 16:37 Report Abuse
அமைச்சகம் நிர்வாகம் administration அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இவர் ஒரு திருப்பரங்குன்றம் சம்பந்தமான பேட்டியில் தான் நிர்வாகி முதல்வர்தான் கொள்கை வகுப்பாளர் என பேசினார். ஐயோ
ஜெய் சிவராம் ஜெய் பாரத் 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
11 ஜூன்,2026 - 16:19 Report Abuse
ரமேஷ் எல்லா கோவில்களுக்கும் சென்று ஆய்வு செய்வது சிறப்பு. அதோடு நிற்காமல் இதற்கு முன்னாள் இருந்த அந்த பாபு எந்த விதமான SCIENTIFIC கொள்ளை அடித்ததையும் வெளி உலகத்துக்கு கொண்டு வர வேண்டும். 0
0
Reply
renga rajan - ,இந்தியா
11 ஜூன்,2026 - 16:12 Report Abuse
ஶ்ரீரங்கம் கோயில் வெள்ளை கோபுரம் வேலைகள் 1 1/2 மாத்த்தில் முடிந்து விடும் என்று கூறினார் ஆனால் இன்னும் வேலை வேகமாம நடக்கவில்லை 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
Advertisement
Advertisement