பூனையை கவ்விய சிறுத்தையால் பீதி

ஊட்டி: ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில் இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை வீட்டின் முன் பகுதியில் இருந்த பூனையை கவ்வி சென்றது. இதனை பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.

மக்கள் கூறுகையில், 'இரவு நேரத்தில் சத்தம் கேட்டு யாராவது கதவை திறந்து வெளியே வந்தால் சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட வரும் சிறுத்தைகள் அவை இல்லாத பட்சத்தில் மனிதர்களை வேட்டையாட வாய்ப்பிருப்பதால் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்,'என்றனர்.

Advertisement