திமுக - தவெக தான் பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள்: அமித் ஷா திட்டவட்டம்
சென்னை: ''பா.ஜ.,வின் கொள்கை எதிரிகள் தி.மு.க.,வும், தமிழக வெற்றிக் கழகமும் தான்,'' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.,வின் மாநில மையக்குழு கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் ராஜா, ராதாகிருஷ்ணன், தமிழிசை, வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: பிரதமராக நீண்ட நாட்கள் பணியாற்றிய சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவர் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களை, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டும். மாவட்டந்தோறும் மூத்த தலைவரை அனுப்பி, பொதுக் கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த வேண்டும்.
அண்ணாமலை விலகியதால், பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தொண்டர்கள் உணரும் வகையில், கட்சி வளர்ச்சி பணியில் நிர்வாகிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.,வுக்கு கொள்கை ரீதியான எதிரி தி.மு.க.,வும், த.வெ.க.,வும் தான். எனவே, கடந்த தி.மு.க., ஆட்சி ஊழல்கள், த.வெ.க., ஆட்சியில் நடக்கும் தவறுகளை மக்களிடம் பேச வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை; நான் பார்த்துக் கொள்கிறேன். ஊர் ஊராகச் சென்று தொண்டர்களை சந்திப்பது மற்றும் மக்களிடம் மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை கூறுவது மட்டுமே உங்கள் வேலை. இவ்வாறு அமித் ஷா பேசியுள்ளார்.
@block_B@ மத்திய கேபினட் அமைச்சர் பதவி
மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது, தமிழகத்தில் தீவிரமாக கட்சி பணியாற்றி வருபவர்களில் ஒருவருக்கு, கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்க அமித் ஷா விருப்பமாக உள்ளார். அவரை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி, மக்கள் சந்திப்பு மற்றும் குறைகேட்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் வாயிலாக தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சியை வேகப்படுத்த அமித் ஷா வியூகம் வைத்துள்ளார்.block_B
பல மாநிலங்களில் வளர்ச்சிக்காக திட்டம் போடுகிறார்கள். திராவிட நாட்டில் 70 வருடமாக ஊழலுக்கு மட்டுமே திட்டம் போடப்படுகிறது. எந்த ஒரு திட்டமும் கமிஷன் இல்லாமல் நடந்ததில்லை. இது தான் திராவிட கொள்கை. இதை தான் சர்க்காரியா கமிஷன் விஞ்ஞானம் முறையில் ஊழல் என்று சொன்னது.
ஐ இப்படியும் உருட்டலாமோ அமித்ஜீ ..
கொள்கை ரீதியில் திருட்டு திராவிடக்கட்சிகளும் விஜய் கட்சியும் ஒன்றுதான். அதே உருட்டுக்கள். நீட் எதிர்ப்பு, நவோதய பள்ளிகள் வேண்டாம். பி எம் ஸ்ரீ வேண்டாம் ஆனால் அதற்கான நிதி மட்டும் வேண்டும். ஒன்றிய அரசு என்ற கூவல், .... அந்த தமிழினத்தின், மனித இனத்தின் துரோகி ராம் சாமியைத் தூக்கிப்பிடிப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம் .
அமைச்சர் பதவி கொடுத்து தான் மாவட்டம் தோறும் செல்ல சொல்ல வேண்டுமா? மாவட்டம் தோறும் சென்று கட்சியை வளர்த்தவரை கோட்டை விட்டு விட்டீர்கள்.
என்ன பெரிய வெங்காய கொள்கை >> சுருட்டுவதுதானே கொள்கை >>
தேர்தலுக்கு முன் வெட்டி கழகத்தின் பின்னால் சுற்றிக்கொண்டு அவர்களுக்காக தேர்தல் கமிஷன் மூலம் கள்ளஓட்டும் போட்டுவிட்டு இப்போது நிர்கதியாய் இருக்கும் இவர்களுக்கு வெட்டிகளாகம் கொள்கை எதிரியா?
திமுகவும் தவெகவும் கொள்கை எதிரிகள் தான், ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டும் அவர்களுடன் கூட்டணி அமைக்க பாடுபடுவோம் என்கிறாரா?
முதலில் நைனார், முருகன், தமிழிசை, வானதியை பாஜக விலிருந்து நீக்குங்கள். இவர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் தமிழ்நாட்டில் ஒரு ஓட்டு எக்ஸ்ட்ராவாக வாங்க முடியாது. இவர்கள் இருந்தால் பாஜகவுக்கு இது வரை விழுந்த ஓட்டுகளும் கிடைக்காது. வெறும் பேட்டி கொடுத்தே காலத்தை ஓட்டுபவர்கள்.
ஆமாம் அண்ணாமலை அப்படியே பா.ஜ.கவுக்கு வாக்குகளை வாங்கி குவித்து விட்டார். அவராலேயே ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல. ஆனா இவரோட ரசிகர்கள் கொடுக்குற அலம்பல் தாங்கமுடியலடா சாமி.
சாமி,அஸ்ஸாம்,மேற்குவங்கம்,தெலங்கானா,திரிபுரா போன்ற மாநிலங்களில் முதல் எம்எல்ஏ வை பெறவே 15 முதல் 20 ஆண்டுகள் ஆனது.
உங்களுக்கு கொள்கை எதிரி அரசியல் எதிரி எல்லாமே நோட்டா மட்டுமே உங்களால் முடிந்தால் அதனை ஜெயித்து விட்டு பிறகு பிற கட்சிகள் உடன் போட்டியிடலாம்.
கொள்கை எதுவுமே இல்லாத விசில் எப்படி கொள்கை எதிரியாக முடியும்?