வடலுார் பொறியாளர் இல்ல திருமண விழா

கடலுார்: குறிஞ்சிப்பாடி தி.மு.க., ஒன்றிய செயலாளர், வடலுார் பொறியாளர் சிவக்குமார்- உமா மகேஸ்வரி, இவர்களின் மகன் டாக்டர் அவினாஷ் குமாருக்கும், திருப்பூர் டாக்டர் கணேசன் பானுமதி -கணேசன் இவர்களின் மகள் டாக்டர் அஸ்விதாவுக்கும், வடலுார் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.

குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட பொருளாளர் கதிரவன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொழிலதிபர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், வர்த்தக பிரமுகர்கள், கடலுார் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர்கள், தி.மு.க., சார்பு அணி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு, சிவகுமார் -உமா மகேஸ்வரி ஆகியோர், நன்றி தெரிவித்தனர்.

Advertisement