கிறிஸ்துவ போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி

55

சென்னை: கிறிஸ்துவ மத போதகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மீது, த.வெ.க., தலைமை கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக கிறிஸ்துவ சபை கூட்டமைப்பு சார்பாக, 'போதகர்கள் சுவிசேஷகர்கள் கூடுகை' என்ற நிகழ்ச்சி, சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், சபாநாயகர் பிரபாகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழக அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் பங்கேற்றனர்.


ஜேசிடி பிரபாகர் பேசியது இதுதான்!


வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

பிரபாகர் பேசுகையில், ''சிறுபான்மை மக்களுக்கான அடையாளம், இந்த அரசு வாயிலாக ஏற்பட்டு வருகிறது; அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மாற்ற வேண்டியது இன்னும் பல இருக்கிறது,'' என்றார்.

வன்னி அரசு பேசுகையில், ''குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது கிறிஸ்துவர்கள் போராடவில் லை. இன்று முஸ்லிம்களை குறி வைத்துள்ள பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., நாளை கிறிஸ்துவர்களையும் குறி வைப்பர். ஆனால், இன்னும் நாம் ஜெபம் மட்டும் தான் செய்கிறோம்.

''இனி கிறிஸ்துவர்கள் அரசியல்மயப்பட வேண்டும். பைபிளில் இருப்பது தான் அரசியலமைப்பு சட்டத்திலும் இருக்கிறது. அந்த சட்டம் இருக்கும் வரை தான் நமக்கு பாதுகாப்பு,'' என கூறினார்.


அமைச்சர் வன்னி அரசு பேசியது இதுதான்!


வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

வன்னி அரசின் பேச்சு, மதக் கலவரத்தை துாண்டும் விதமாக உள்ளதாக ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

த.வெ.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
மத சார்பற்ற அரசியலைத் தான் த.வெ.க., முன்னெடுக்கிறது. த.வெ.க.,வில் இருப்பவர்கள், ஜாதி, மத நிகழ்ச்சியில் பங்கேற்கக்கூடாது என கட்சி தலைமை உத்தரவு போட்டுள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் பைபிள் வசனங்களை சபாநாயகர் பிரபாகர் பேசியதை கட்சி தலைமை கண்டித்தது.

தற்போது, கிறிஸ்துவ மத போதகர்கள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியதை, கட்சி தலைமை ரசிக்கவில்லை; அவரை கண்டித்ததுடன், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்டு உள்ளது.

அதற்கு, 'வன்னி அரசு பேசும்போது தான் நிகழ்ச்சிக்கு சென்றேன். அவர் பேசியது எனக்கு தெரியாது. இனி, மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன்' என சபாநாயகர் விளக்கம் அளித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement