கே.ஆர்.எஸ்., சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சாதனை

மதுரை: மத்திய அரசின் கல்வி அமைச்சகம், நிதி ஆயோக் சார்பில் 2047 ம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை நோக்கிய மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ‘விக்சித் பாரத் பில்டதான்’ என்ற பெயரில் ஊக்குவித்து வருகிறது. தேசிய அளவில் இதற்கான போட்டியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி (சி.பி.எஸ்.இ) 11ம் வகுப்பு மாணவர்கள் அஸ்வின், ஸ்ரீகதிர், ஸ்ரீநாத் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். மாணவர்களின் இச்சாதனைக்கு ஆசிரியர்கள் சீ. இசை கவிப்பிரியா, இ. மேகலா உறுதுணையாக இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் சூர்யபிரபா பாராட்டினார்.



Advertisement