பிரான்சில் ஜி 7 உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்
புதுடில்லி:பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார். ஜூன் 16-17 தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேறகிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜூன் 13, 14 தேதிகளில் பிரான்சின் நைஸ் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர் ஜூன் 16-19 தேதிகளில் ஈசியான், பாரிஸ் மற்றும் ஜூன் 14-15 தேதிகளில் ஸ்லோவாக்கியாவுக்கும் அதிகாரப்பூர்வமாகவும் பிரதமர் மோடி செல்கிறார்.
பிரான்சின் நைஸ் நகரில் அந்நாட்டு அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இரு நாடுகள் இடையே வர்த்தக உறவுகள், சர்வதேச அரங்கில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர் இருவரும் இணைந்து பாரத் இன்னோவேட்ஸ் ( Bharat Innovates) என்ற நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர். இந் நிகழ்வு இந்தியா, பிரான்சிஸ் உள்ள முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்கும் ஒரு முயற்சியாகும்.
தொடர்ந்து ஜுன் 14 முதல் 16 வரை ஸ்லோக்கியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இதன்மூலம் ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெறற பின்னர் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
வர்த்தகம், முதலீடு, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமரின் பயணம் அமையும்.
அரசு முறை பயணத்தின் முக்கிய கட்டமாக பிரான்சில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
சர்வதேச நாடுகள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது, ஏஐ தொழில்நுட்பம், நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் உச்சி மாநாட்டில் நடக்க இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் பிரதமர் மோடியுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
மாமனிதர் மோடிஜீ அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற ஒரே உலக தலைவர்.. வாழ்க பல்லாண்டு ,,
பாடுன வாயும் ஆடுன காலும்...
இருநூறுக்கும் டாஸ்மாக்கை தேடி ஓடும் அப்பாவி போலவா
மந்திரிகள் வேறு யாரும் வெளிநாடு போக விரும்பவில்லை! வேலை இங்கே அதிகம்! அதனால் இவர் ஒருவரே போகிறார்! நிறைய பேர் போனால் எரிபொருள் செலவு, போக்குவரத்து செலவு அதிகம் ஆகி விடும்! நாட்டுக்கு அதிக செலவு கூடாது அல்லவா?
வயதான காலத்தில் உலகத்தை சுற்றிக் கொண்டுள்ளார்.
உயரிய விருதுக்கு ஒத்துக் கொண்டார்களா
ஞானம் உமக்கு இருநூறு மேல் கொடுப்பார்களா...
அந்நியர்களிடம் தாரைவார்க்க இனியும் நாட்டில் என்ன உள்ளது?மேலும்
-
'ஒரு தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' எண்ணெய் பனை 15 ஹெக்டேரில் சாகுபடி
-
கரூரில் 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
-
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பூக்கள் விற்பனை மந்தம்
-
அப்போ அணில்; இப்போ 'பியூஸ் கேரியர்'; மின் தடை குறித்து பழனிசாமி கிண்டல்
-
பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் அகற்றம்
-
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்