இந்தியர்களின் சுயமரியாதையை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி; அமித் ஷா புகழாரம்
புதுடில்லி: இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் சுயமரியாதையையும், கவுரவத்தையும் மீட்டெடுத்ததே பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்து, புதியதொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தில் பல்வேறு துறைகளில் மிக முக்கியமான மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
புதிய பார்லி கட்டடம், ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களுக்கு மாற்றாக, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகம், புதிய கல்விக் கொள்கை, மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்கல்விகளில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், சுயசார்பு இந்தியா ஒவ்வொரு இந்தியனின் நோக்கமாக மாறியது, சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில், நக்சல்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கூட்டு வலிமையானது தனது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் திறன்கள் குறித்துப் பெருமை கொள்ளக் கற்றுக்கொண்டது. குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் சுயமரியாதையையும், கவுரவத்தையும் மீட்டெடுத்ததே பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு தாங்களே சுய தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்
கிட்டத்தட்ட 1000 வருடங்கள் இஸலாமியர்களிடமும் , கிருஸ்துவர்களிடமும் அடிமைப்பட்டு கிடந்தது.. கோடிக்கணக்கான மக்கள் ஒரு சிறு கும்பல்களின் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு கிடந்தது எதனால் என்றால், நம்மிடையே நிலவிய ஒற்றுமை இல்லாத குணம்.. ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து அதற்க்கு சன்மானங்கள் பெற்று வாழந்த பெரும்பாலான சுயநலநோக்க மக்களால்தான்.. இல்லாவிட்டால் வெறும் நூற்றுக்கணக்கான முகமது கோரி, வுரங்கசீப், திப்பு போன்ற இஸ்லாமியனும், ஜெனரல் டயர் போன்ற கிருஸ்துவனும் எப்படி நமது ஆட்களை வைத்தே நம்மை ஜாலியன் வாலாபாக் போன்ற இடங்களிலும் கொண்றுகுவித்தது.. நமது மக்களே எப்படி ஒருவரை ஒருவர் காட்டிக்குடுத்து கொல்வதற்கு துணையாக இருந்தனர். இந்த நமது சுயநல மனபோக்கால்தான் உலகில் நாம் மதிப்பு இழந்தோம்.. 1947 நமது தேசம் சுதந்திரம் பெற்றாலும், ஆங்கிலேயர்கள் நிறுவி வைத்துவிட்டு சென்ற ஊழல் இந்து மத வெறுப்பான கான்-கிராஸ் ஆட்சியிலும் தொடர்ந்து அடிமையாகத்தான் இருந்தது.... நமது நாட்டிற்கான மரியாதையை கிடைக்கவே இல்லை.... உலகளவில் ஒரு மரியாதை இந்தியாவிற்கும் , இந்தியர்களுக்கும் கிடைத்தது என்றால் அது கடந்த 13 வருடங்களாகத்தான் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் யாரும் மறுக்க முடியாது..
அப்போ இந்திரா ராஜிவ் ஜி எல்லாம் அடமானம் வெச்சி இருந்தாங்களா? அது எப்படின்னு எந்த பிஜேபி சொம்பும் சொல்ல மாட்டாங்க
மூளை இருந்தா தானே உனக்கு தெரியும்மேலும்
-
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம்; சுகாதாரத்துறையை வலுப்படுத்த வழங்கியது மருத்துவ உபகரணங்கள்
-
அமெரிக்காவுடன் மீண்டும் போர்... ஹார்முஸ் ஜலசந்தியை மறுபடியும் மூடியது ஈரான்
-
இன்று த.வெ.க., மா.செ.,க்கள் கூட்டம்
-
கத்தியை காட்டி மக்களை மிரட்டிய வாலிபர் கைது
-
தி.மு.க.,வில் இணைந்தார் அ.தி.மு.க., 'மாஜி' பெஞ்சமின்
-
தி.மு.க., அணியில் இருந்து இன்னும் வெளியேறவில்லை