நீர் நிலைகளை துார்வார கலெக்டரிடம் மனு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி உள்ள நீர்நிலைகளை தனியார் தொண்டு நிறுவனங்களை கொண்டு துார்வார அனுமதி கேட்டு, கலெக்டர் குலோத்துங்கனிடம் ரவிக்குமார் எம்.எல்.ஏ., மனு அளித்தார்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் பெய்யும் மழை நீர் அனைத்தும் நேரடியாக கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை அரசு சார்பில் துார்வாரி மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், வில்லியனுார் தொகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சமூக பொறுப்பு திட்ட நிதியின் கீழ், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நீர் நிலைகளை துார்வார நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கனிடம், ரவிக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
மேலும்
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
-
புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்
-
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!