கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்

22

நமது நிருபர்




டில்லி பயணத்தை முடித்து கொண்டு மங்களூரு விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய், கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார்.

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான பேர் இக்கோவிலில் தரிசனம் செய்கின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மூகாம்பிகையின் தீவிர பக்தர். கோவிலுக்கு தங்கவாள் காணிக்கை செலுத்தியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சாமி தரிசனம் செய்து இருக்கிறார். சமீபத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவும், கொல்லுாருக்கு வந்து, மூகாம்பிகையை தரிசித்தனர்.

இந்நிலையில், டில்லி பயணம் முடிந்து புறப்பட்ட முதல்வர் விஜய் மங்களூரு விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு இருந்து கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார். மதியம் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பின், மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் விஜய் சென்னைக்கு திரும்புகிறார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

டில்லி விசிட் நிறைவு; கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு புறப்பட்டார் முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement