மகள் மாயம் : தாய் புகார்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே திருமணமான தனது மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
திருக்கோவிலுார் அடுத்த புதுவேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் மனைவி சுபாஷினி, 22; திருமணமாகி ஒன்றரை வருடமாகிறது.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். இதன் காரணமாக புதுவேங்கூரில் உள்ள தாய் மேரி வீட்டில் சுபாஷினி தங்கியிருந்தார்.
கடந்த 7ம் தேதி மேரி வயலுக்குச் சென்று மாலை 6:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த மகள் காணவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் மேரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement