முருகு மெட்ரிக் பள்ளியில் மழலையர் பள்ளி திறப்பு

திருப்பூர், ஜூன் 11–

திருப்பூர் பி.என். ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, ஜே.பி. நகரில் உள்ள முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி மழலையர்களுக்கான பள்ளி திறப்பு விழா நடந்தது. முதன்முறையாகப் பள்ளிக்கு வருகை தந்த மழலையருக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். வரவேற்பிற்காக நின்றிருந்த ‘டாம் மற்றும் ஜெர்ரி’ பொம்மைகளைக் கண்டு குழந்தைகள் குதுாகலித்தனர். மழலையரை பள்ளி தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா ஆகியோர் வரவேற்றனர்.

–––

முருகு மெட்ரிக் பள்ளியில் மழலையர் பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மழலையருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Advertisement