பைக்கிலிருந்து விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பெண் இறந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நெக்கூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி புனிதவள்ளி, 45; இவரது மகன் அருண்குமார், 25; இவர், தனது தாயுடன் கடந்த 6ம் தேதி பைக்கில் எஸ்.புதுாருக்கு சென்றார். செம்பாக்குறிச்சி வனப்பகுதி அருகே சென்ற போது திடீரென காட்டுபன்றி சாலையின் குறுக்கே வந்ததால், அருண்குமார் நிலை தடுமாறி தாய் புனிதவள்ளியுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். புனிதவள்ளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புனிதவள்ளி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரின் சகாப்தம் அல்ல; மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; இந்தியா நிலைப்பாடு இதுதான்
-
ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்; மின்வாரிய அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ஒவ்வொரு விடியலுக்கும் நன்றி சொல்லுங்கள்!
-
பிரதமர் மோடி தலைமையில் கூடியது நிடி ஆயோக் கூட்டம்
-
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
-
இன்று 3வது விக்கெட்; மம்தா கட்சி ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா
Advertisement
Advertisement