எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்

22

நமது நிருபர்



''த.வெ.க., அமைச்சர்களுக்கு ஊழல் செய்ய தெரியாது; கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது,'' என, முதல்வர் விஜய் பேசினார்.

சட்டசபையில், முதல்வர் விஜய் பேசியதாவது: முந்தைய ஆட்சிகளில், தமிழகத்தின் கருவூலம் திசைமாறி, உருமாறி சென்றுள்ளது. நிதி நிலைமையை மோசமாக்கி சென்று விட்டனர். இதற்காக, தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டோம்.

கொள்ளையடிக்க மாட்டோம்

இதுகுறித்து சொன்னால், எங்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது. த.வெ.க., அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஒன்றும் தெரியாது என்கின்றனர். மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு மக்கள் பணத்தை எங்களுக்கு சுருட்ட தெரியாது.

டெண்டர்களை முறைப் படுத்த தெரிந்த அளவிற்கு, அதன் ரேட்டை உயர்த்தி, ஊழல் செய்ய தெரியாது. பணியிடமாற்றம், பதவி உயர்வுக்கு பணம் பறிக்க தெரியாது. புதிய பணியிடங்கள் உருவாக்க தெரியும்; அதை விற்க தெரியாது. கோவில்களில் நிர்வாக சீர்கேட்டை தடுக்க தெரியுமே தவிர, கோவில் பணத்தை கொள்ளையடிக்க தெரியாது; அதை தாரைவார்க்க தெரியாது. அரசு வருமானத்தை தனிப்பட்ட கஜானாவுக்கு மடைமாற்ற தெரியாது.

போதை கலாசாரத்தை வளர்க்க தெரியாது; பெண்களை மதிக்க தெரியும். 'ஓசி பஸ், ஆயிரம் ரூபாய் கேஸ்' என்று பேச தெரியாது. மக்கள் சேவை செய்ய தெரிந்த அளவிற்கு சுயநல சேவை செய்ய தெரியாது.

முறைகேடு எப்படி செய்வது என்பதை, நாங்கள் தெரிந்து கொள்ளப் போவது இல்லை; தெரிந்து கொள்ளவும் ஆசைப்படவில்லை. கடைசி வரைக்கும் அது தெரியாமல் இருந்து விட்டு போகட்டும். பல்வேறு விதமான நிதி நெருக்கடியை எங்களுக்கும், மக்களுக்கும் பரிசாக கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

மின் தடை நீக்க குழு

இந்த நிதி நெருக்கடியிலும், 5,932 கோடி ரூபாய் அளவிற்கு விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மின் தடையை நீக்க, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 மின் தடை ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறது. புதிதாக, 77 மின் தடை நீக்க மையம் அமைக்கப்பட உள்ளன. விரைவில் மின் தடை முழுமையாக சரி செய்யப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.


மன்னராட்சி கிடையாது மனசாட்சியுள்ள மக்களாட்சி'

''இது மன்னராட்சி கிடையாது; மனசாட்சியுள்ள மக்களாட்சி. கேள்வி கேட்கவும், விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு,'' என, முதல்வர் விஜய் பேசினார். சட்டசபையில், முதல்வர் பேசியதாவது: சட்டம் -- ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து கிடையாது. பெண்கள் பாதிக்கப்படுவதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பிரச்னை எல்லாம், மே, 10ம் தேதிக்கு பின் வரவில்லை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் ஏற்படும் பிரச்னை. இதுபற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது அக்கறையாக தெரியவில்லை; அவதுாறு அரசியலாகவே தெரிகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு டி.ஜி.பி., நியமிக்கப்படவில்லை.அதை கேட்டு கேட்டு ஓய்ந்து போய் விட்டோம். கடந்த ஆட்சியில் நடந்த பிரச்னைகளுக்கு, இப்போது எங்கள் ஆட்சியில் விடை கண்டுபிடிக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாக கொட்டி கிடக்கிறது.

முந்தைய ஆட்சியில், போலீஸ் துறை யார் கையில் இருந்தது. ஆரம்ப நிலையிலேயே, இந்த பிரச்னைகளை ஏன் கட்டுப்படுத்தவில்லை? மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த பிரச்னை குறித்தும், என்ன நடக்கிறது என்றும் தெரியும். இதுபற்றி யார் வேண்டுமானாலும், என்னிடம் கேள்வி கேட்கலாம்.

இது மன்னராட்சி கிடையாது; மனசாட்சியுள்ள மக்களாட்சி. கேள்வி கேட்கவும், விமர்சனம் செய்யவும் அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, நடுநிலையோடு இந்த பிரச்னை குறித்து பேசினால், நன்றாக இருக்கும். சட்டம் -- ஒழுங்கு பிரச்னை, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசினால், அதை காது கொடுத்து கேட்பதற்கு, இந்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு விஜய் பேசினார்.


@block_G@

எங்கள் அரசு பற்றி பேய்கள் பேசக்கூடாது

சட்டசபையில் முதல்வர் விஜய் மேலும் பேசியதாவது: 'சட்டசபையில் கவர்னர் உரை வாசித்தபோது, இரண்டு முறை தேசிய கீதம் பாடியது தவறு. இதற்கு முன், அப்படி சட்டசபையில் நடந்தது இல்லை.

அந்த மரபை மாற்றி விட்டீர்கள்' என, போர் மாதிரி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டன. கடந்த, 2021 ஆகஸ்ட் 2ம் தேதி, சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கரு ணாநிதி படம் திறப்பு விழா நடந்தது. ஜனாதிபதி பங்கேற்ற அந்த விழாவில், தேசிய கீதத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று குறிப்பிடப் பட்டு இருந்தது.

தேசிய கீதம் இரண்டாவதாகத் தான் பாடப்பட்டது. இதைப்பற்றி கேட்டால், அது ஜனாதிபதி பங் கேற்ற நிகழ்ச்சி என்பர். இவர்கள் பேசுவது ஒன்று; செய்வது ஒன்று. மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். விஜயையும், சாமானியர்கள், சமூக நீதி அரசையும் அவமானம் செய்வதற்கு, அரசியலில், 'சீனியாரிட்டி'யை பயன்படுத்துகின்றனர்.

மாநில உரிமை, மொழி உரிமை, பண்பாடு, கலாசாரம் எனக்கூறி, இரட்டை வேடம் போடு கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது, இந்த அரசை குறிப்பிடுவதற்கு, 'ஈவில்' அதாவது தீமை என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த அரசை பற்றி, 'டெவில்ஸ்' அதாவது பேய்கள் பேசக்கூடாது. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார். block_G

Advertisement