திமுக - அதிமுக பாணியில் அண்ணாமலையின் புதிய கட்சி?
சென்னை: பா.ஜ.,வில் இருந்து விலகிய, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 'வீ தி லீடர்' அமைப்பை தொடங்கி, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். தன் இயக்கத்தை, வரும் செப்டம்பரில், அரசியல் கட்சியாக மாற்ற உள்ளார். இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., பாணியில், மாநில, மாவட்ட நிர்வாக அமைப்புகளை உருவாக்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.
'தேசிய கட்சிகள் பேசும் மொழி, தமிழக மக்களுக்கு புரிவதில்லை' என, அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, தான் தொடங்க உள்ள கட்சிக்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வை பின்பற்றி, வார்டு, பகுதி, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநில அளவில் கட்சி அமைப்பு முறையை ஏற்படுத்தி, நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, நீண்ட காலமாக திராவிட கட்சிகளுடன் பயணித்து, தற்போது, அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சிலர் வாயிலாக, அக்கட்சிகளின் அமைப்பு முறை தொடர்பாக, ஆலோசனை கேட்டு வருகிறார்.
பா.ஜ.,வை போல், மாநில பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள் என நியமிக்காமல், மண்டல செயலர்களை நியமிக்க உள்ளார். அதே சமயம், தி.மு.க., - அ.தி.மு.க.,வில், பல ஆண்டுகளாக ஒரே பதவியில் சிலர் இருப்பது போல், அண்ணாமலை கட்சியில் இருக்க முடியாது.
ஒருவர் எத்தனை ஆண்டுகளுக்கு, ஒரு பதவியில் இருக்க முடியும், தேர்தலில் எத்தனை முறை போட்டியிட முடியும் என்ற காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாகவும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்ணாமலையை பற்றி வசை பாடுபவர்கள் , அண்ணாமலையை பற்றி நன்கு தெரிந்து அவர் இயக்கத்தில் சேர்ந்திருக்கும் 17.5 லட்சம் பேரையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். . அண்ணாமலையை தூற்றுபவர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா ? . அண்ணாமலை கொள்ளை அடித்து ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலம் ஊழல் செய்திருக்கிறார் என்றால் பாஜக மேலிடம் அவரை விட்டுவைக்குமா ? அண்ணாமலை கூட இருந்தவர்கள் அவர் பற்றிய விஷயங்களை இந்நேரம் அமித்ஷாவிடம் போட்டு கொடுத்திருக்கமாட்டார்களா ? யார் யாரையோ ரைடு பண்ணி இருக்கும் வருமானவரித்துறை , அமலாக்கத்துறை , மோடி , அமித்ஷா ஆகியோர் கண்ணசைத்தால் ரைடு பண்ணியிருக்காதா ? பாஜக தலைவர்கள் இவர்மீது கோபப்பட்டபிறகும் இவரை கட்டம் கட்டி விடாதா ? இவரை போய்வாருங்கள் என்று விட்டுவைக்குமா ? அவர் போனவருடம் டிசம்பர் மாதமே கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று சொல்லியதாக கூறுகிறாரே ? பிறகு ஏன் அவரை தேர்தலில் பிரசாரம் செய்ய பணித்தது. ?? எடப்பாடிக்காக வோட்டுக்கேட்டு பிரச்சாரம் செய்ய வைத்து அவரை ஊர் ஊரை அலையவைத்ததது ?? ஹெலிகாப்டர் மூலம் அவரை பிரச்சாரத்துக்கு ஊர் ஊருக்கு செல்ல ஏன் அனுமதித்தது ? வேறு வேறு மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதித்தது ? தமிழக பாஜகவில் அண்ணாமலையை தவிர்த்து மீதி இருக்கும் அத்தனை பெரும் அத்தனை உத்தமர்களா ? நல்லவர்களா ? கட்சிக்காக நாயாக உழைத்தவர்களா ? கட்சியை பெரிதாக மதித்து மோடியின் திட்டங்களை, பாஜக கட்சியின் கொள்கைகளை கீழ்மட்டம் வரைக்கும் கொண்டு சேர்த்தவர்களா ? நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவினர் எத்தனை பேர் எத்தனை நாட்கள் தங்கள் தொகுதிகளில் தெருத்தெருவாக, வீடு வீடாக வந்து வோட்டுக்கேட்டார்கள் என்பதை சொல்லமுடியுமா ? தேர்தல் நாளில் ஒரு வாக்குச்சாவடியில் கூட நூறு சதவீதம் வோட்டுப்பதிவிற்கு முயற்சி செய்யவில்லையே ? இவர்கள் எல்லாம் அண்ணாமலையை பற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள்.
திருட்டு திராவிடம் ஒழிந்தது
ஒரு விஜய்க்கு எதிராக அண்ணாமலை உதயாநிதி பழனிச்சாமி ஸ்டாலின் போராடுகிறார்கள். அண்ணாமலை என்ன முயற்சி எடுத்தாலும் விஜய்யை வீழ்த்த முடியாது அடுத்த 20 வருடங்கள் விஜய் தான் முதல்வர். 2000 கோடிகளில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் அண்ணாமலைக்கு அரசியல் ஒரு சைடு பிசினஸ்.
அண்ணாமலை கட்சியின் பேரை பாஜக 2.0 என்று வைத்து விட்டால் பிரச்சினை இருக்காது. இப்படி தீவிர சங்கத்தினரிடம் வசவு வாங்கிக் கொள்ளவேண்டாமே.
பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள விரும்பும் ஊடகங்கள் அண்ணாமலையின் புதிய கட்சியும் கழகங்களைப் போலத்தான் இருக்கும் என்று மக்களுக்குச் சொல்ல விரும்புவது ஏன் ????
ஆட்டுக்குட்டி தோல் போர்த்திய புலி தான் அண்ணாமலை ஆரம்பிக்கும் பாஜக 2.0. எல்லாத்தையும் ஸ்பூன் ஃபீட் பண்ணணுமா?
லாஜிக் வேணாமா .... மலை முதலில் உண்ணப்போவது பாஜகவின் வாக்கு வங்கியைத்தான் .... ஸ்பூன் ஃபீட் பற்றிபிப் பேசும் அறிவாலய எடுப்புகள் சிந்தனை வறட்சி உள்ளவர்கள் .... dumbhead ஆகவே காலந்தள்ளும் அவர்களுக்கு திமுகவின் பி டீம் தான் டிவிகே என்பதை ஒப்புக்கொள்ள சங்கடமாகத்தான் இருக்கும் ....
அமர் பிரசாத் போன்ற கீழ்த்தரப் பேச்சு பேசும் ஆட்களை அருகில் வைத்துக்கொண்டு நாகரீக அரசியல் சாத்தியமேயில்லை. இதுபோன்ற கைத்தடி கும்பல் விரைவில் அழிவுக்கு வித்திடும். பாவம் அண்ணா.
பாஜக வில் இருந்த வரையில் மலைநாடு பற்றி ராங்காக ஒண்ணும் பேசல்லியே ரங். இப்போது என்ன ஆனது?
இவரோட இந்த கட்சி எவ்வளவு மாதம் தாக்குப்பிடிக்க போகுது என்று தெரியவில்லை என்று பாஜக அரசியல் பிரமுகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அறிவாலய எடுப்புகள் இப்போது செய்யும் வேலையைச் சரியாச் செஞ்சாலே போதும் .... கவலை வேண்டாம் ....
திராவிட அடிமைகளுக்கு ஏன் இந்த கவலை
இவர் அரசியலில் ஈடுபடுவதை நிறுத்தி, விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்து அதன்வளர்ச்சியை பெருக்குவதற்க்கான வழிமுறைகளை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பயிற்றுவித்து உதவலாம். அதன் மூலம் தமிழநாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடலாம். இதுபோல எத்தனையோ வழிமுறைகள் உள்ளது.
நீங்க கூத்தாடி பின்னாடி இருந்து நாட்டை சூரையாடலாம்
என்ன சொல்ல வர்றாரு? தமிழிசை மாதிரி பேர்வழிகளுக்கு கட்சியில் இடமில்லைன்னு மறைமுகமா சொல்றாரோ?
நிறைய குமரி மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் பேசும் தமிழ் மொழி மற்ற மாவட்ட கட்சியினருக்கு புரிவது கஷ்டம். எனவே அவர்கள் தங்கள் மாவட்ட வட்டார வழக்கில் பேசும் தலைவரின் இயக்கத்துக்கு மாறலாம்.. இல்லாவிட்டால் பழையபடி நிதின் நபின், அமித் ஷா மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.