'பழனிசாமிக்கு நாசுக்கான அறிவுரை!'
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மதுரையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 'எம்.ஜி.ஆர்., -எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.,வை துவங்கினாரோ, அது வெற்றியடைய வேண்டும். அ.தி.மு.க.,வை ஏசியவர்கள், தன்னை விமர்சித்து பேசியவர்கள் குறித்து கவலைப்படாமல், கட்சி வளர்ச்சி தான் ஒரே குறிக்கோள் என, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தாய் உள்ளத்தோடு நடந்தவர் ஜெயலலிதா.
'அதேபோல் ஒவ்வொரு தலைவரும் நடந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா எப்படி கட்சியை கட்டி காப்பாற்றினாரோ, அதேபோல் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஆதரவும் தெரிவிக்காம, எதிர்ப்பும் தெரிவிக்காம நாசுக்கா அறிவுரை சொல்லிட்டாரே பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.
பின்னே துணிந்து ‘ கட்சி. இப்படிக் கரைந்து. போவதற்கு. நீங்கள் காரணம்’ என்று. உடைத்து. கூறவா. முடியும்? இன்னும் ஆளும். கட்சிக்குத். தாவினால். என்னென்ன. பயன்கள். கிடைக்கும், எவ்வளவு. தூரம் நம்பி. கலந்துகொள்ளலாம். என்று. ஆழம். பார்த்த. பிறகுதானே. ராகத்தை. மாற்றிப். பாட. வேண்டும்மேலும்
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
-
புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்
-
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!